fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!

Aavin sales new record

சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது.

இது தொடர்பாக, மேலாண்மை இயக்குநர் வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆவின் நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சாதனையை ஆவின் நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு, நாளொன்றுக்குச் சராசரியாக 28,50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது அது 34 லட்சம் லிட்டர் என உச்சத்தை எட்டியிருக்கிறது.

எனவே, பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருந்தாலும் அதைத்தாண்டி, ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் பால் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சிறப்பாகச் சேவை செய்து வருகிறோம். பால் கொள்முதலில் சாதனை செய்தது போலவே, பால் விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close