தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு அமைத்தது தமிழக அரசு
TN govt set up new committee to attract investments
கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றினை அமைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் சீனா போன்ற நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர் .
இச்சூழலில் , தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக முதலீடுகளைச் செய்துள்ள நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி , அவர்கள் பிற நாடுகளிலிருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்பதன் மூலம், நம் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட முடியும். இந்நிலையில் தான் இப்பணிகளை முடுக்கிவிட தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி , இவ்வாறு இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் “ முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு ” ஒன்றினை நடத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் .