ChennaiTamil NewsTrending Nowதமிழ்நாடு
கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
Kodambakkam corona cases crosses 1000
சென்னை:
கொரோனா தொற்று எண்ணிக்கையில் கோடம்பாக்கம் ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கொரோன தாக்கம் தீவிரமாக உள்ளது. பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்திருக்கிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் செனையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது இடத்தில் கோடம்பாக்கம் உள்ளது. 1,041 பேருக்கு கொரோனா உள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் 790 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அண்ணாநகரில் 554 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 581 பேருக்கும் கொரோனா உள்ளது.