RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
அண்ணா வழியில் மறப்போம் மன்னிப்போம்- ஜெயக்குமார்!
ன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுகவின் 37 எம்பிக்களால் தமிழகத்துக்கு பலன் இல்லை என முன் வைத்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அண்ணா வழியில் மறப்போம், மன்னிப்போம் அணுகுமுறையைத்தான் நாங்கள் கையாள்கிறோம்.
பொதுவாக அதிமுகவை யார் விமர்சனம் செய்தாலும் அவர்களை தனது பிரஸ்மீட்டிலேயே விளாசி விடும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பொறுமை காத்தார்.
மேலும் நேற்று பத்திரிகையாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியிருக்கக் கூடாது என அறிவுரை கூறினார். பத்திரிகையாளராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகள் தலைவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் ஒருமையில் பேசி இருக்கக்கூடாது என கூறினார்.