fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இன்று அதிகாலை முதலே வரிசையில் நின்று  வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

மஹாராஷ்ட்ரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இதுமட்டுமின்றி ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பதட்டமான தொகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுளது. இன்று நடைபெறும் தேர்தலில் 14,21,61,000 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல் 1,279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close