RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு செல்ல முடியும் என்று உறுதியாக அறிவித்தது.
இதையடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப்பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது.