fbpx
Tamil News

ஒரே நாளில் 60 தாலிபான் போராளிகளை கொன்றது ஆப்கான் ராணுவம்!

தலிபான் போராளிகள்  ஆப்கனிஸ்தானில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதை ஒடுக்க ஆப்கான் ராணுவம் அமெரிக்க படையினரோடு இணைந்து கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் அந்த போராளிகளை அழிக்க லாகர், வரர்டாக், பாக்டிகாக் போன்ற மாகாணங்களில் உள்ள தலீபான் போராளிகள் நிலைகளை குறிவைத்து வான்வழியாகவும், தரை வழியாகவும் ஆப்கான் ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் போர் விமானங்கள் இடைவிடாது குண்டு மழை பொழிந்ததால் அந்த போராளிகள் பதுங்கி இருக்கும் குழிகள் தகர்க்கப்பட்டன. மேலும் தலீபான் போராளிகள் ஆயுதக்கிடங்குகள் மற்றும் ரேடியோ கோபுரங்கள் போன்றவைகளும் அழிக்கப்பட்டன.

இந்த அதிரடி தாக்குதலானது ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணி நேரம் தொடர்ந்து நடத்தப்பட்டதில் 60 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஆப்கன்  உறுதியாக தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close