GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம்…! குழு அமைத்த தமிழக அரசு!
Team formatted for face mask
சென்னை:
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக குடும்ப அட்டை மூலமாக தலா இரண்டு விலையில்லா முகக்கவசங்களை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைகள் மூலமாக 13.08 முகக்கவசங்கள் அளிக்கப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.