GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்…!
Tamilnadu police cancels kanimozhi MP security
சென்னை:
திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
திமுகவின் முக்கிய பிரமுகரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து வருகிறார். சாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியை சந்தித்து மனு ஒன்றை அளித்து இருந்தார்.
இந் நிலையில் இன்று அவரது வீட்டிற்கு பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர். ஆனால் காவல்துறை அதுபற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்களின் பணி மிக அவசியம் என்பதால் காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.