தி. நகர் ரங்கநாதன் தெருவில் அதிரடி…! 150 கடைகள் ஒரே நேரத்தில் மூடல்…! என்ன பிரச்னை?
T nagar street shops closed
சென்னை:
தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் தனிக் கடைகள் மட்டும் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் உள்பட சென்னையின் பல பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன.
சென்னையில் கொரோனா உச்சத்தில் இருப்பதால் சுகாதார குழுக்கள் சார்பில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று திறக்கப்பட்ட கடைகளில் அரசு அறிவித்த வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது. இதனை அடுத்து அந்த தெருவி உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் ரங்கநாதன் தெரு மீண்டும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.