fbpx
Tamil News

மூத்த பத்திரிகையாளர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளருமான எஸ்.முத்தையா காலமானார்

பிரபல எழுத்தாளரும் ,மூத்த பத்திரிகையாளருமான எஸ்.முத்தையா (வயது-89 ) உடல்நல குறைவின் காரணமாக இன்று காலமானார்.

இவர் 1930-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் என்ற நகரில் பிறந்தவர் முத்தையா. கட்டிட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் என்ற படிப்புகளை படித்து முடித்தவர். 1951-ல் டைம்ஸ் ஆப் சிலோன் என்ற பத்திரிக்கையில் இணைந்து 17-ஆண்டுகாலமாக பணிபுரிந்தவர். பின்னர் தொடர்ந்து பணியாற்றிய இவர் புகழ்பெற்ற இதழில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சென்னையில் மறு கண்டுபிடிப்பு என்ற 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.தற்போது சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close