குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்..! எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட்!
Seeman tweet about SPB
சென்னை:
இளமையான, இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட் போட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர்.
உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், மகன் சரண், அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எஸ்பிபி விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது ட்வீட்டர் பதிவில், என்றும் இளமையான இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்டு இரசித்து மகிழ ஆவலோடு காத்திருக்கிறோம். மீண்டு வருவீர்கள், நாங்கள் கேட்டு மகிழ்வோம் என்ற பெரும் நம்பிக்கையோடு விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.