GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்..! திடீர் பதற்றம், போலீசார் குவிப்பு!
Periyar statue damaged in tiruvallur
திருவள்ளூர்:
திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்க்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற்னர்.
இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாரின் வெண்கல சிலையின் முகப்பகுதி, கண்ணாடி போன்றவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகையால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.