உதகையில் புதிய மருத்துவக்கல்லூரி…! முதலமைச்சர் இன்று அடிக்கல்!
Ooty new medical college CM opening today
உதகை:
உதகையில் ரூ.447½ கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் 11வது புதிய மருத்துவ கல்லூரி நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதம், தமிழக அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டிட பணிகள் நடைபெற இருக்கிறது.
இதற்காக எச்.பி.எப். பகுதியில் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, இன்று காணொலி காட்சி மூலம் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.