அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா…? இதோ அதிர்ச்சியான தகவல்…!
No new government jobs in tamilnadu
சென்னை: பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல கோடி ரூபாயை செலவு செய்து வருகிறது.
தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர். ஆனாலும் அந்த நிதி போதுமானதாக இல்லை என்பதால், அடுத்து தமிழக அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் கருணை அடிப்படையிலான பணிகளை தொடர்ந்து நிரப்பலாம் என்றும் கொரோனா செலவினங்களை கட்டுப்படுத்தவே இந்த முடிவு என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.