fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை : தமிழக அரசு !

தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள  அரசு பேருந்துகளில், கட்டண உயர்வு இல்லை எனவும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும், எனவும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர, இதர மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட உள்ளதால், எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து, இன்று மாலை முடிவு செய்து அறிவிக்கப்படும், என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close