fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

என்எல்சி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்… முதலமைச்சர் அறிவிப்பு!

NLC accident, CM edapaddi palanisamy announced relief fund

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: விருத்தாசலம் வட்டம் நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையம் 2-ல் உள்ள அலகு 5-ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று திடீரென வெடித்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின்பேரில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவி

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close