கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள ஆயுதப்படையின் முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் மூலம் COVID-19 க்கு எதிராக இந்தியாவின் பலமான போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அவ்வாறு ஈடுபடுபவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாராட்டுவதாக டிவிட் செய்துள்ளார்.
மேலும் இந்தியாவின் ஆயுதப்படை வீரர்கள் எப்போதும் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் தான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக செயல்படுவதாகவும் பாராட்டினார். தற்போது இந்தியாவில் COVID -19 ஐ கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, அத்தகைய வீரர்கள் தான் முக்கிய காரணம் என்றும் அவர்களுக்கு பெரிய நன்றி என்றும் கூறினார்.