fbpx
GeneralRETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி!

Modi speech at India global week 2020

இன்று நடந்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது கொரோனா தொற்றிற்கு எதிராகா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது என கூறினார். எந்த சோதனையாக இருந்தாலும் இந்தியா மீண்டு வரும் என்பது வரலாறு என நம்பிக்கையான வார்த்தைகளை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றிற்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்தி வருகின்றது. கொரோனா தொற்றிற்கு எதிரேகா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா தற்பொழுது மிகவும் விரைவாக செயல்படுகின்றது. நமது நாட்டில் தயாரிக்கும் தடுப்பு மருந்துகள் பிற நாடுகளுக்கும் கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மக்களின் சுகாதார நிலையை போலவே பொருளாதார நிலையிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. தற்பொழுது இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்க்கான வாய்ப்புகள் நிறையாக உள்ளது. வேளாண் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீட்டுக்கு உகந்ததாகவும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதி நேரடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகள் மத்திய அரசு வழங்கயிருக்கின்றது. இலவச சமையல் எரிவாயு, கடன், உணவுப்பொருட்கள் ஆகியவை பயனாளர்களை சென்று அடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close