fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

மான, ரோஷம் இருக்கா எஸ்வி சேகருக்கு? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Minister jayakumar questions SV sekhar

சென்னை:

மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக எஸ்வி சேகர்  5 ஆண்டு பெற்ற சம்பளத்தை  திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

அண்மையில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி  சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  இந் நிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

எஸ்.வி.சேகர் அதிமுக கொடியை அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் ஐந்து ஆண்டு பெற்ற சம்பளத்தை  திருப்பிக் கொடுக்க வேண்டும்.

தற்போது எம்.எல்.ஏ பென்சன் வாங்குகிறார். அதையும் திருப்பிக் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close