துப்பாக்கிக் கலாச்சாரம் தற்போது திமுகவில் தலை தூக்கிவிட்டது..! அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
Minister jayakumar opinion about dmk mla arrest
சென்னை:
துப்பாக்கிக் கலாச்சாரம் தற்போது திமுகவில் தலை தூக்கிவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சொத்து பிரச்சனை தொடர்பான தகராறில் திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை போலீசாருடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் திமுக எம்.எல்.ஏவை தேடி வந்தனர்.
இந் நிலையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது: நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது. துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கி விட்டது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என்று அவர் தெரிவித்தார்.