fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

எல்லையில் வீரமரணம் அடைந்த பழனி…! சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!

Military Palani funeral in native

சாயல்குடி:

எல்லையில் வீரமரணமடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார்.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, ராணுவ விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. அங்கு மதுரை ஆட்சியர் வினய் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதைக்கு பிறகு, ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உடல், கடுக்கலூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வீரமரணமடைந்த பழனியின் உடல் சொந்தமான விவசாய இடத்தில் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தின் போது ஏராளமான பொதுமக்கள் பழனியின் உடலுக்கு நேரில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close