சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு…!
Mageshkumar agarwal sworn in as Chennai new commissioner
சென்னை:
பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னையின் புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார்.
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றப்பட்டுள்ளனர். அதன் படி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மகேஷ்குமார் அகர்வால் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று சென்னையின் புதிய ஆணையராக பொறுப்பேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்றை தடுக்க விதிகளை பின்பற்ற வேண்டும்.
அத்யாவசியம் என்றால் மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். அவ்வாறு வந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லையில் உள்ள காவலர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார்.