விதிகளை மீறிய காவலர்களை மன்னிக்க முடியாது…! கமல் டுவிட்!
Kamalhaasan twitter over sathankulam issue
சென்னை:
விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை எதிர்த்து பல மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தல்பட்டு உள்ளது. இந் நிலையில், விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் சாத்தான்குளத்தில் அரங்கேறியது.
இதுபற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமது டுவிட்டரில் கூறி உள்ளதாவது: உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல்.
உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.
அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம் என்று பதிவிட்டுள்ளார்.