திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்…! தொண்டர்கள் ஹேப்பி!
J anbazhagan recovers says doctors
சென்னை:
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் அவர் 80% வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெ.அன்பழகனுக்கு கல்லீரல் பிரச்னையும் இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது. இந் நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது நேற்று அவர் சுவாசிக்க செயற்கை சுவாசம் 80 % தேவைப்பட்ட நிலையில், இப்போது 67 % போதுமானதாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.
அவரது உடல்நிலை முன்னேறி வருவதை அறிந்த திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.