fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…! இளைஞர் வெறிச்செயல்!

House owner killed in Chennai

சென்னை:

சென்னை அருகே வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளரை இளைஞர் ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த குணசேகரன் என்பவர் வீட்டை அஜித் என்ற இளைஞருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். 4 மாதங்களாக அஜித் வீட்டு வாடகை செலுத்தாத நிலையில் தொடர்ந்து வாடகை செலுத்துமாறு குணசேகரன் கேட்டு வந்துள்ளார்.

குணசேகரன் மீண்டும் வாடகை கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் வீட்டி உரிமையாளரை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் குணசேகரன் தப்பி ஓட அஜித் விரட்டி சென்று குத்தி கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாடகை கேட்டதற்காக வீட்டு உரிமையாளர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close