fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்..! மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!

Eb bill payment date extended

சென்னை:

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் மேலும் 15 நாட்கள் நீட்டித்து அதாவதும் ஜூலை 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 4 மாத காலத்திற்கான மின்நுகர்வு, 2 மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில், சமமாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மின்நுகர்வு 2 மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி, மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் மின்கணக்கீடு செய்யும் போது, தனித்தனியே ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close