fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள் , பிளாஸ்டிக் டீ, கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கை பைகள் என 14 வகையான வெவ்வேறு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று இரு அமைச்சகத்திற்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட் அந்த தேதிக்குள் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close