fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

மின் கட்டண வசூலுக்கு திமுக எதிர்ப்பு…! வரும் 21ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!

DMK protest against eb tariff

சென்னை:

மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச்சில் இருந்து கொரோனா காரணமாக மின் கட்டணம் கணக்கீடப்படவில்லை. முந்தைய மாத கட்டணங்களையே செலுத்துமாறு அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்ட போது மொத்தமாக கணக்கிடப்பட்டதால் அனைவருக்கும் கட்டணம் அதிகமானது. மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தியது. மேலும் பல விஐபிக்களும் அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து அரசு விளக்கம் ஒன்றையும் வெளியிட்டது. நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஜூலை 21ம் தேதி திமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே சமூக இடைவெளியை கடைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close