ஜெ. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!
DMK leader stalin condolence
சென்னை:
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறி உள்ளார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
இந் நிலையில் அன்பழகனின் மறைவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது! மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்? என இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக கட்சி கொடி அரைக்கம்பத்தில் 3 நாட்களுக்கு பறக்கவிடப்படும், திமுக கட்சிக் கூட்டங்கள் 3 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.