fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா தொற்று ராயபுரத்தில் 1272 ஐ கடந்தது!;மக்கள் மிகுந்த அச்சம்!!

Rayapuram 1272 corona cases

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.அதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.

536 பேரில் சென்னையில் மட்டும் 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். அதனை தொடர்ந்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் சென்னை நிலவரத்தை பொறுத்த வரை மண்டல வாரியாக பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.

கோடம்பாக்கத்தில் 1,077, திரு.வி.க நகரில் 835, தேனாம்பேட்டையில் 786, அண்ணா நகரில் 586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close