RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு !!
கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக முதல்வர் பழனிச்சாமி இன்று துவங்கிவைத்தார்.இதை தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவின் போது பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் அவர் பேசியதாவது;
பொதுமக்கள் வர இருக்கும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை தரர்களுக்கு தலா 1000 ரூபாய் தொகை வழங்கப்படும் என்றும் , பொங்கல் வைப்பதற்காக ஒரு ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை , முந்திரி , திராட்சை,கரும்பு போன்றவைகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.