தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Chief Minister edapaddi palanisamy press meet
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடக்கின்றன. புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத்தொடங்கி இருக்கின்றன.
ஆட்டோக்கள் இயங்க, சலூன்கள் திறக்க அனுமதி தரப்பட்டு உள்ளது. மருத்துவக் குழு ஆலோசனைபடி கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு துரித நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை.
ஆர் எஸ் பாரதி கைது விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் புகார் கூறுகிறார். பட்டியலினத்தவர்களை அவர் இழிவாக பேசி இருக்கும் போதே கட்சி தலைவர் என்ற அடிப்படையில் ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.
இ டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ் பாரதி கூறியதில் உண்மை கிடையாது. ஏதோ விஞ்ஞானி போன்று விளம்பரத்துக்காகப் பொய் புகார் கொடுத்துள்ளார் என்று கூறினார்.