ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டாஸ்…! சென்னை காவல்துறை எச்சரிக்கை!
Chennai police warning
சென்னை:
சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால் அசம்பாவிதங்கள், உயிரிழப்புகள் விபத்துகள் அதிகரிக்கின்றன. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிறுவர்களும், இளைஞர்களும் மாஞ்சா நூலில் பட்டம் விட தொடங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாஞ்சா நூல்களை கட்டி பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
மாஞ்சா நூல் கொண்டு பட்டம் தயாரித்து விடுபவர்கள் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.