fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

போலீஸ் துணை கமிஷனர்களிடம் வீடியோ கால் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்..! கலக்கல் ஏற்பாடு!

Chennai Police commissioner new order

சென்னை:

பொதுமக்கள், போலீஸ் துணை கமிஷனர்களிடம் ‘வீடியோ கால்’ மூலம் குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தற்போது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 63691-00100 என்ற செல்போன் எண்ணில் ‘வாட்ஸ்-ஆப்’ வீடியோ காலில் பேசி பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந் நிலையில் பொதுமக்கள் ‘வாட்ஸ்-ஆப்’ கால் மூலம் பேசி அந்தந்த பகுதி துணை கமிஷனர்களிடமும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் துணை கமிஷனர்களை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்களிடம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேச தனித்தனி செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

பரங்கிமலை-70101 10833, அடையாறு-87544 01111, தியாகராயநகர் -90030 84100, மயிலாப்பூர்-63811 00100, திருவல்லிக்கேணி-94981 81387, கீழ்பாக்கம் -94980 10605, பூக்கடை-94980 08577, வண்ணாரப்பேட்டை -94981 33110, மாதவரம்-94981 81365, புளியந்தோப்பு -63694 23245, அண்ணாநகர் -91764 26100, அம்பத்தூர் -91764 27100.

மேலும் புதிய அறிவிப்பு ஒன்றும் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 63691 00100 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் ‘வாட்ஸ்-ஆப்’ வாயிலாக போலீஸ் கமிஷனருக்கு புகார்களை சுருக்கமாக அனுப்பி வைக்கலாம் என்றும், அந்த புகார்கள் முக்கியமாக இருக்கும் பட்சத்தில் புகார்களை அனுப்பியவர்களிடம் போலீஸ் கமிஷனர் ‘வாட்ஸ்-ஆப்’ காலில் தொடர்புக்கொண்டு பேசுவார் என்றும், சாதாரண புகார்கள் குறிப்பிட்ட துணை கமிஷனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close