கடைசியில் கமிஷனருக்கே கொரோனாவை ஒட்ட வச்சுட்டீங்களே…!
Chennai corona cases in police department raises
சென்னை: கூடுதல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.
ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வராதபடி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட பீதி கிளம்பியது.
நேற்று ஒரே நாளில் சென்னை போலீசார் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர், 7 இன்ஸ்பெக்டர்கள், துணை ஆணையர், 2 உதவி ஆணையர்கள் என சென்னையில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் இன்று ஒரே நாளில் சென்னை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 7 போலீசாருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 101ஐ கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.