fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் உச்சக்கட்டத்தில் கொரோனா…! 9 மணி நேரத்தில் 22 பேர் மரணம்…!

Chennai 22 dead in last 9 hours

சென்னை:

சென்னையில் கொரோனாவுக்கு 9 மணி நேரத்தில் 22 பேர் பலியாகி இருக்கின்றனர்.

சென்னையில் எந்த பகுதியில், எத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்ன என்பதை மண்டலங்கள் வாரியாக சென்னை மாநகராட்சி தினமும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று வெளியிடப்பட்டு அறிவிப்பின் வழியாக, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 17,275 பேர் குணமடைந்துள்ள நிலையில் 382 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 60.02% பேர் ஆண்கள், 39.97% பெண்கள்ர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 9 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close