தலைநகர் டெல்லியில் நிர்வாண போராட்டம்..! அறிவித்த அய்யாக்கண்ணு…!
Ayyakannu protest announcement
சென்னை:
கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம் நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு, டெல்லியில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம், எலிக்கறி சாப்பிடுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
பின் மக்களவை தேர்தல் நேரத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசி, போராட்டங்களை வாபஸ் பெற்றார்.
இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது:
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் பல போராட்டங்களை நடத்தினோம்.
அப்போது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமித் ஷா உறுதி அளித்தார்.
ஆனால் செய்யவில்லை. உறுதிமொழியை நிறைவேற்ற வில்லை என்றால், மீண்டும் டெல்லி சென்று நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.