RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
சென்னை யானைக்கவுனியில் வருவாய் புலனாய்வுத்துறை 2 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தது
சென்னையில் அமைந்துள்ள யானை கவுனியில் சுமார் 60 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்க கட்டிகள் பற்றிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அந்த கொரியர் நிறுவனத்திற்கு சென்ற வருவாய் புலனாய்வுத்துறை தங்கக்கட்டிகளை பறி முதல் செய்தது. இது தொடர்பாக அந்த கொரியர் நிறுவனத்தின் மேனேஜர் முரளி மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஜெயினை பிடித்து விசாரித்து வருகின்றனர்.