GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
நெய்வேலி என்எல்சியில் பயங்கர விபத்து…! 5 பேர் பலி, பலர் கவலைக்கிடம்!
Nlc accident 5 dead

நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிலாளர்கள் 5 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















