ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னைக்கு அடுத்த ஷாக்…! ஆவின் ஊழியர் கொரோனாவுக்கு பலி…!
Chennai aavin employee dead due to corona

சென்னை: சென்னையில் ஆவின் ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 26ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் ஆவின் பண்ணை ஊழியர்கள் பலர் வேலைக்கு வர தயக்கம் காட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த ஆவின் ஊழியர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்புகள் 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.















