RETamil Newsதமிழ்நாடு
திமுக கூட்டவிருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு !

சென்னை:
தி.முக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு போலீஸ் தடை விதித்துள்ளது.
திமுக சார்பில் நாளை(ஏப்.15) அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று, ஊரடங்கு, மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் தேனாம்பேட்டை போலீசார் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனுமதி மறுத்து திமுக தலைமையகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்த எந்த தடையும் இல்லை என தேனாம்பேட்டை போலீசார் தெறிவித்துள்ளனர்.















