fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 80,000 மாணவர்கள் விண்ணப்பம்…!

80000 applications received to join arts, science colleges

சென்னை:

80,000 மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர சேர்க்கைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை கடந்த 20ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 109 கல்லூரிகளுக்கும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 571 தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 80,000 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31 வரை உள்ளது. வருகின்ற நாட்களிலும்  கலை, அறிவியல் படிப்புகளுக்கு  அதிக மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close