8 மாவட்டங்களில் தட்டி தூக்க போகும் மழை…! வானிலை மையம் ‘வார்னிங்’
8 districts may get heavy rain says Chennai metrology centre
சென்னை; தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. சில பகுதிகளில் கனமழை பெய்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் வெப்பச்சலனத்தால், சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி நெல்லை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்க உள்ளது. அதன் காரணமாக கரையோர பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.