ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா..! அதிகாரிகள் அதிர்ச்சி!
4 corona cases identified Chief Minister office
சென்னை:
சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னையில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 28 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி உள்ளனர்.
பொதுப் பணியாளர்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
இந் நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை இயக்குனர், அலுவலக உதவியாளர்கள் இருவர், ஓட்டுனர் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.