GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
புழல் சிறையில் புரட்டி எடுக்கும் கொரோனா…! 33 பேர் பாதிப்பு…!
33 corona cases in puzhal prison
சென்னை:
புழல் சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து உள்ளனர்.
இதற்கிடையில், புழல் சிறையிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது. ஏற்கனவே 30 தண்டனை கைதிகள், தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று புழல் மத்திய சிறையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிறைக்காவலர், வங்கதேச கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானது.
இதனுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.புழல் சிறையில் ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.