Others
பிஎஸ்என்எல் நிறுவனம் + டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்….?

- மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய ஜியோ, ஏர்டெல் வோடஃபோன் ஐடியா
- சந்தையில் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் முயற்சியில் பிஎஸ்என்எல்
- டாடா நிறுவனத்துடன் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிஎஸ்என்எல்
ஜியோ இடத்தைப் பிடிக்குமா.. பிஎஸ்என்எல் ?
தனியார் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்களில் சமீபத்திய விலை உயர்வுகளால் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் நிறையப் பேர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாறி வருகின்றனர். பல ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு விரைவாக போர்ட் செய்கிறார்கள். மேலும் சமூக ஊடகங்களில் இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இவ்விரண்டு நிறுவனங்களும் இந்தியா முழுவதும் 1,000 கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது அடுத்துவரும் நாட்களில் கிராமப் புறங்களில் வேகமான இணைய வேகத்தை வழங்க உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 4ஜி இணைய சேவை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனம் அவற்றுக்குப் போட்டியை வழங்கும் வகையில் தனது சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டாடா நிறுவனம் இந்தியாவின் நான்கு பிராந்தியங்களில் டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது. இது நாட்டின் 4ஜி உள்கட்டமைப்பின் வளர்ச்சியை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
சிம் கார்டில் ஐந்து விதிமுறைகள் மாற்றம்..பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கெனவே நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட 4ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கையை 100,000 ஆக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது. கடந்த மாதம், ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்தன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதே நேரத்தில் வோடஃபோன் இந்தியா நெட்வொர்க்கின் புதிய கட்டணங்கள் ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலான உயர்வை செயல்படுத்தியுள்ளது. அதேபோல, ஏர்டெல் 11 சதவீதம் முதல் 21 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் அதன் கட்டணத்தை 10 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது பரவலான வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
