ஒரே நாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
2 district collectors got corona in tamilnadu
சென்னை:
தமிழகத்தில் ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா காய்ச்சல் காரணமாக அலுவலகத்திற்கு வராமல் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி பொன்னையா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.