செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டம்…!
Schools may open in Andhra from Sep.5
ஐதராபாத்:
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்த கல்வி தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ்.
அப்போது அவர் கூறியதாவது: பள்ளிகளை மீண்டும் திறக்க செப்டம்பர்-5 ஆம் தேதி தேதியை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில் சூழ்நிலையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை பகல் உணவுக்கு பதிலாக உலர் ரேஷன்கள் மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளில் வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் முன் தொடக்கக் கல்வி (எல்.கே.ஜி மற்றும் யுகேஜி) அறிமுகப்படுத்தப்படும்.
ஜூனியர் அரசு கல்லூரிகளில் உள்ள ஏபி ஈம்செட், ஜேஇஇ, ஐஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.