பெங்களூரு 5 மண்டலமாக உடையும்….சிக்கலே.. இதுல தான் ……!

முன்னதாக விகாச சவுதாவில் கன்னடர்கள் அல்லாதவர்களுக்கு கன்னட மொழியை கற்பிப்போம் என்ற பிரச்சாரத்தை கர்நாடகா மேம்பாட்டு ஆணையம் முன்னெடுத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆணையத்தின் தலைவர் புருஷோத்தமா பிலிமாலே, பெங்களூரு மாநகராட்சியின் அதிகாரத்தை பரவாக்குவதில் பிரச்சினை வரும் என்று கூறவில்லை. தற்போது பெங்களூரு நகரில் கன்னடர்களை விட பிற மாநில மக்கள் தான் அதிகம் வசித்து வருகின்றனர்.இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கன்னடர்கள் அகதிகளாக வாழும் சூழல் காணப்படுகிறது. இந்த சூழலில் மாநகராட்சியின் அதிகாரத்தை பரவலாக்கினால் ஏராளமான பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. மாநகராட்சியின் உறுப்பினர்களாக கன்னடர்கள் அல்லாதோர் இடம்பெறக்கூடும். அவர்கள் மேயர்களாக கூட தேர்வு செய்யப்படலாம். குறிப்பாக கன்னட மொழி பேராபத்தில் இருக்கிறது.கர்நாடகா மாநிலத் தலைநகராக இருக்கும் பெங்களூருவை நிர்வாக ரீதியில் மாற்றம் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ப்ரூஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) என்ற பெயரில் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சியை 5 கவுன்சில்களாக பிரித்து திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு லண்டன் நகரை முன்மாதிரியாக எடுத்துள்ளனர். அங்கு 32 பாரோ கவுன்சில்களாக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.இன்னும் சொல்லப் போனால் வீட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ கன்னட மொழி தேவைப்படுவதில்லை. இலக்கியங்களில் மட்டும் தான் கன்னடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கன்னட ஆய்வு மாணவர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புகளும் இல்லை. இந்த மொழிக்கான தேவை படிப்படியாக குறைந்து வருகிறது. பெங்களூரு நகரம் ஐடி தலைநகராக திகழ்வதால் பல்வேறு மாநில மக்கள் வந்து வேலை செய்கின்றனர்.எனவே கன்னடர்கள் அல்லாத நபர்கள் வசிக்கும் சூழல் உள்ளது. ஒருவேளை தனியார் துறையில் குரூப் சி, டி பிரிவுகளில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தால் அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விடுகிறது. இது கன்னடர்களுக்கு பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் கன்னட அடையாளமே மறைந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று குறிப்பிட்டார்.